Tuesday, 21 June 2011

கோடியக்கரை வனவிலங்கு புகலிடம்:

கோடியக்கரை வனவிலங்கு புகலிடம்:

கோடியக்காடு வேதாரண்யத்துக்குத் தெற்கே இருக்கிறது. 10 கி.மீ. நீளத்துக்கும் 5 கி.மீ அகலத்துக்கும் அடர்ந்துள்ள இக்காடு இருமருங்கிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. இதைச் சுற்றிலும் உவர்மண் இருக்கிறது. மழை குறைவாக இருப்பதால், நீண்ட அகன்ற இலையுள்ள மரங்கள் இங்கு வளருவதில்லை. பாலைப்பழம், துவரம்பழம், கொழுஞ்சிப்பழம் போன்ற சில காட்டுப் பழங்களும், கீரை, கிழங்கு வகைகள் சிலவும், சீந்தில் கொடி என்னும் மூலிகையும், கோழிதுவரை என்ற கொட்டையும் பூனைக்காய்ச்சிக் கொட்டையும் முட்புதர்களும் இக்காட்டில் மண்டிக் கிடக்கின்றன.

இங்கு வரையாடு (Black Buck) என்ற மான் இனமும், புள்ளிமானும், குதிரை, நரி முதலிய விலங்குகள் உள்ளன. இக்காடு சதுப்பு நிலத்தில் இருக்கிறது. ஆறுகளுக்கும் கடலுக்கும் இடைப்பட உப்பங்குழிகளில் பூநாரை செங்கா, நாரை, வக்கா, கூழக்கடா, சிரவி, உல்லான் போன்ற பறவை இனங்களை ஐப்பசி மாதம் முதல் தைமாதம் வரை காணலாம்.

இங்குள்ள காடுகளில் (type one para) ஒருவகைப்பறவை (Flamingo) கோடியக்கரைக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆண்டுதோறும் வந்து செல்கிறது. இது சிவப்பு நிறமும், அழகிய தோற்றமும் கொண்டது. நான்கடி உயரம், நீண்டு சுருங்கிய கால்கள், குழாய் போன்ற வளைந்த கழத்து, ஆரஅமர உண்ணும் தன்மை, ஒற்றைக்காலில் நின்று கொண்டே உறங்கும் ஆற்றல் இத்தகைய இயல்புகள் நிறைந்தது. கோடியக்கரையில் கடலோரத்திலுள்ள நண்டு இனங்களில் சாறைக் குடிக்கவே இவை இங்கு வருகின்றன.

No comments:

Post a Comment